VELLI KILAMAI SAMBIRANI: வெள்ளிக்கிழமைகளில் இதை மட்டும் செய்தா போதும் குடும்ப பிரச்சனைகள் தீரும்

2
1343

VELLI KILAMAI SAMBIRANI: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் வெள்ளிக்கிழமைகளில் இதை மட்டும் செய்தா போதும் குடும்ப பிரச்சனைகள் தீரும் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

பணம் இருப்பவர்களிடம் நிம்மதி இருப்பதில்லை. சந்தோஷமாக வாழ்பவர்களிடம் பணம் மட்டும் தான் பிரச்சனையாக இருக்கும்.

மற்றபடி அவர்களின் நிம்மதிக்கு குறைவு இருக்காது. இதைப் போக்குகிற இரகசியம் தான் இந்த கட்டுரை. நம்பிக்கையோடு இதை மட்டும் செய்து பாருங்க. பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் விசேஷமானவை.

தை மாதத்தின் வெள்ளிக்கிழமை கூடுதல் விசேஷம். இந்த ஒரு விஷயத்தை மட்டும் தொடர்ந்து செய்துக்கிட்டே வாங்க.. குறிப்பா வெள்ளிக்கிழமைகளில் மறக்காம இதைச் செய்துக்கிட்டு வாங்க.. அப்புறமா உங்க பிரச்சனைகள் எல்லாம் தெறிச்சு ஓடிடும். வெள்ளிக்கிழமை ரொம்பவும் முக்கியமான நாள்.

அதிர்ஷ்டம், பணம், செல்வம், நிம்மதி, செழிப்பு, வசதி என நீங்கள் எத்தனைப் பேர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு எல்லாம் முக்கியமான கிழமையாக இருப்பது வெள்ளிக்கிழமை தான்.

அதே சமயம், இத்தனையையும் தரும் மகாலட்சுமி எதில் எல்லாம் வாசம் செய்கிறாள் என்று தெரியுமா? வாசனையான, சுகந்தம் தரும் பொருட்களில் எல்லாம் நிச்சயமாகவும், நிரந்தரமாகவும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

அதுவும், வெள்ளிக்கிழமைகளில் வீடுகளில் சாம்பிராணி தூபம் போட்டால் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தரமாகவே சந்தோஷத்துடன் வாசம் செய்வாள் என்பது ஐதீகம். இது காலம் காலமாக நம் வீடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.

தனித்த சாம்பிராணி என்று இல்லாமல் நம் தேவைகளுக்கேற்ப சாம்பிராணியுடன் சில பொருட்களைச் சேர்த்து தூபம் இட வீட்டில் மங்கலங்கள் நிறையும் என்பது உறுதி. அந்த வகையில் சாம்பிராணியுடன் எந்தெந்த பொருட்களை சேர்த்தால், என்னென்ன பலன்களைப் பெறலாம் என்று தெரிந்துக் கொள்ளுங்கள். உங்கள் பிரார்த்தனைக்கேற்ப பலனைப் பெறுங்கள்.

VELLI KILAMAI SAMBIRANI
VELLI KILAMAI SAMBIRANI

சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.

சாம்பிராணியில் அகில் சேர்த்து தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.

சாம்பிராணியில் தூதுவளையை சேர்த்து தூபமிட வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருக்கும்.

சாம்பிராணியில் சந்தனத்தை சேர்த்து தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

சாம்பிராணியில் அருகம்புல் பொடியை சேர்த்து தூபமிட சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்..

சாம்பிராணியில் வெட்டிவேரை சேர்த்து தூபமிட காரியசித்தி உண்டாகும்.

சாம்பிராணியில் வேப்பிலையை சேர்த்து தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

சாம்பிராணியில் வெண்கடுகை சேர்த்து தூபமிட பகைமை விலகும்.

சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை சேர்த்து தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.

சாம்பிராணியில் ஜவ்வாது சேர்த்து தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.

சாம்பிராணியில் வேப்பம்பட்டையை சேர்த்து தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.

சாம்பிராணியில் நாய் கடுகை சேர்த்து தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலகுவார்கள்.

சாம்பிராணியில் காய்ந்த துளசியை சேர்த்து தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.

சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை சேர்த்து தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை சேர்த்து தூபமிட சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்.

சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை சேர்த்து தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.